மகாத்மா காந்தி மெட்ரிக்குலேசன் பள்ளி மரக் கன்று
வழங்கும் நிகழ்ச்சி
கடையநல்லூர், தென்காசி
கடந்த வருட செப்டம்பர் முதல் இந்த 2016 சனவரி முடிய நான் சீனாவில் இருந்தேன். அதனால் என்னால் நமது தமிழகத்தில் சுற்றுச்சூழல் வகுப்புகளை ஏற்பாடு செய்வதில் சிறிது தொய்வு ஏற்ப்பட்டது. கடந்த பிப்ரவரியில் கடையநல்லூர் மகாத்மா பள்ளிக்கூடத்தில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியை தென்காசி எக்ஸ்னோரா தலைவி. திருமதி.G.S.விஜய லக்ஷ்மி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். என்னை மரங்கள் பற்றி பேச அழைத்திருந்தார்கள்.
நிகழ்ச்சி காலையில் ஆரம்பமானது. வழக்கமான அறிமுக உரையுடன் ஆரம்பமாகி, பின்பு மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்தது. பள்ளி பயிலும் மாணவ மணிகளுக்கு நாட்டு மரக் கன்றுகளை வழங்கினார்கள். துணிப் பைகளுடன் மாணவர்கள் மரங்களை பெற்றுகொண்டனர். அப்படியே அவர்களுக்கு ஒரு சிட்டுக் குருவி கதை மூலமாக வங்காரி மாதாய் பற்றி சொல்லிவிட்டு, மரங்கள் பற்றியும் சொன்னேன். அவர்கள் வீட்டில் பார்த்த, காட்டில் பார்த்த மரங்கள் பற்றியும் சொல்லிவிட்டு, மரங்கள் மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா வகை பறவை, பூச்சிகளுக்கும் ஒரு இருப்பிடமாக உள்ளது என்பதை விளக்கி விட்டு சில காணொளிகளைக் காட்டினேன்.
பின்பு அவர்களிடம் சிறிது பேசிவிட்டு, சோலை காடுகளை காப்போம் என்ற காணொளியைக் காட்டிவிட்டு ஒரு சூழல் உறுதிமொழியுடன் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டேன்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எக்ஸ்னோராவிற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும், இந்த நிகழ்ச்சிக்காக பாப்பான்குளத்தில் இருந்து வந்த எனதருமை நண்பன் கிட்டுவிற்கும் எனது நன்றிகள்.
அன்புடன்
பிரவின் குமார்
0 comments:
Post a Comment