அம்பை - ரோட்டரி நிகழ்ச்சி
திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக எனது பேராசிரியர்.திரு.விஸ்வநாதன் அவர்கள் என்னை அழைத்திருந்தார்கள்.
நான் சூழல் பாதுகாப்பு பற்றியும், சில விலங்குகள் அழிவின் நிலையில் உள்ளதை பற்றியும், சில களப் பணிகளில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளையும் சொன்னேன். மேலும் விலங்குகள் மீதான தவறான கருத்தை மாற்றும் படியாகவே நிகழ்ச்சி இருந்தது.
எனது சிறு வயது முதலே என்னை சூழல் மீதான செயல்பாட்டில் ஈடுபடுத்தி, என்னை ஊக்கப்படுத்திய எனது பசுமை பேராசிரியர்.திரு.விஸ்வநாதன் அவர்களுக்கு என் நன்றி.
அன்புடன்
பிரவின் குமார்
0 comments:
Post a Comment