About

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday 26 May 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 23



சிறிய பாலுட்டிகள் பாதுகாப்பு
 விழிப்புணர்வு நிகழ்ச்சி: கடையம்

கடந்த ஏப்ரல் 30 அன்று "நான் காணும் சிறிய பாலுட்டிகள்" என்ற ஒரு நிகழ்ச்சியை திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் வட்டத்தில் உள்ள கட்டேறிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடத்தினேன். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் ஆசிரியர்கள், இரண்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். 






நான் பங்கேற்பாளர்களின் அறிமுகத்திற்கு பிறகு அவர்கள் தினமும் பார்க்கும் விலங்குகள் என்ன என்ன என்று கேட்டுவிட்டு, அவர்கள் பார்க்க விரும்பும் விலங்குகள் பற்றியும் கேட்டுவிட்டுஇயற்கை என்ற ஒரு வீடியோவை காண்பித்தேன். பின்பு காட்டு விலங்குகளையும், அவற்றின் நன்மைகளையும் சொன்னேன். பின்பு அனைவருக்கும் மொத்தமாக சேர்த்து 10 சுற்றுச்சூழல் கேள்விகளை கேட்டேன். இந்த கேள்விக்கு பதில் ஆம் என்றால் கைகளை தூக்க வேண்டும், இல்லை என்றால் சும்மா நிற்க வேண்டும் ..பலவித கேள்விகளுக்கும் பலவித பதில்களுடன் இந்த மாணவர்கள் தங்கள் சூழல் அக்கறையை அப்படியே வெளிப்படுத்தினர்




அவர்களை சுற்றி உள்ள காட்டு பகுதியில் உள்ள பலவித முயல்கள், அடிக்கடி பார்க்கும் வௌவால், வயல் பக்கம் திரியும் எலிகள், மரங்களில் சாடும் அணில்கள் பற்றி சுவாரசியமாக கேட்டு தெரிந்து கொண்டேன். 

பின்பு முள் எலிகள் பற்றியும் சொன்னேன். பின்பு பங்கேற்பாளர்கள் அனைவரும் ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சிறிய பாலுட்டிகளின் எண்ணிக்கை, முக்கியத்துவம், படங்கள் மற்றும் சிறப்பியல்புகள் போன்றவற்றை சொன்னேன்




ஒவ்வொரு குழுவில் இருந்தும் ஒரு குழு தலைவர் முன்னால் வந்து அவர்கள் இன்று தெரிந்து கொண்ட தகவல்களை திரும்ப சொல்லி கைதட்டல்களை பெற்றனர். பின்பு சிறிய பாலுட்டிகளை பாதுகாக்கும் விதமாக ஒரு உறுதி மொழியை அனைவரும் சேர்ந்து எடுத்து கொண்டோம். இரண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை பற்றி தங்கள் கருத்துக்களைச் சொன்னர்கள். பின்பு குழு புகைப்படத்துடன் அவர்கள் இனி செய்ய வேண்டிய செயல்கள் பற்றி சொல்லிவிட்டு வந்தேன்.  






இந்த நிகழ்சிக்காக உதவிய மதிவாணன் ATREE, நண்பர்.வெற்றி மற்றும் பள்ளியில் வகுப்பை நடத்த அனுமதி வழங்கிய பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் என் நன்றிகள். மிக சிறிய குழுவிற்கு எப்படி மிக சிறப்பான வன விலங்கு பாதுகாப்பு செய்திகளை எளிமையாக வழங்க முடியும் என்பதை எனக்கு பல முறை சொன்ன முனைவர்.தானியல் மற்றும் திரு.மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள். மேலும் இந்த நிகழ்சிக்காக விளம்பர திரைச் சீலை (banner) செய்து வழங்கிய என் அலுவலக நண்பர் பிரவின் அவர்களுக்கும் என் நன்றிகள். இந்த நிகழ்வை தினமணி, தினமலர் மற்றும் தி இந்து செய்தித்தாள்களில் பிரசுரிக்க உதவிய  ஊடக நண்பர்களுக்கும் என் நன்றிகள்.      



ஓவ்வொரு சிறிய விலங்குகளும் இந்த சூழலுக்கும், காடுகளுக்கும் மிகப் பெரிய உதவி செய்து வருகின்றது. அதிகம் கவனிக்கப்படாத விலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருந்தது.    

பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 

தொடரும் நம் சூழல் பயணங்கள் 22


கல்லூரி மாணவர்களிடம் ஒரு கலந்துரையாடல் - ஆழ்வார்க்குறிச்சி

திருநெல்வேலி, நாணல்குளம் வௌவால் விழிப்புணர்வு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதிய வேளையில் ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரிக்கு வந்தேன். கல்லூரி முதல்வர் முனைவர். ரஞ்சித் சிங் அவர்களை சந்தித்து விட்டு இளங்கலை உயிர் தொழில் நுட்பவியல் துறைக்கு சென்றேன். செல்லும் வழியில் நுண்ணுயிரியல் துறையில் என் ஆசிரியர் முனைவர். விஸ்வநாதன் அவர்களையும், விலங்கியல் துறையில் முனைவர்.சுதாகர் அவர்களையும் சந்தித்தேன். முனைவர்.சுதாகர் அவர்கள் கடந்த பல வருடமாக வௌவால்கள் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

அப்படியே நான் பயின்ற உயிர் தொழில் நுட்பவியல் துறைக்கு வந்தேன். என் நண்பன் பாலாவை சந்தித்து விட்டு, துறைத்தலைவர் முனைவர். இராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து விட்டு, ஏற்கனவே திட்டமிட்டபடி மூன்று ஆண்டு மாணவர்களுக்கும் உயிரி தொழில் நுட்பவியல் பற்றியும், வேலைவாய்ப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்தும் சில தகவல்களை வழங்குவதற்காக சென்றேன். மிக முக்கியமாக எப்படி ஆராய்ச்சிகள் நமது பகுதியில் உள்ள சமுகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்று சில உதாரணங்களுடன் சொன்னேன். 

பின்பு அவர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி அறிவியலை எளிமையாக, ஆர்வமாக கற்க வேண்டும் என சொன்னேன். இந்த கலந்துரையாடலில் எனக்கு தெரிந்த சில தகவல் மூட்டைகளை அவர்களிடத்தில் சொல்ல செல்லவில்லை. அவர்களிடத்திலே புதைந்து உள்ள கேள்வி கேட்கும் திறனையும், அடிப்படை அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக இந்த கலந்துரையாடல் இருந்தது.   

மிக முக்கியமாக சென்னை ஐ.ஐ.டி, சென்னை பல்கலைக்கழகம். பெங்களுரு NCBS, பயோக்கான் போன்ற பெரிய கல்வி மற்றும் ஆய்வு நிலையங்களில் உள்ள பல மாணவர்கள் இந்த கிராமப் பகுதியை சார்ந்தவர்கள். பலரும் அடிப்படை கல்வியை இங்கு படித்தவர்கள் ஆவர்.                     

அறிவியல் ஆர்வம், ஆங்கில சரளம் இரண்டும் மிக அவசியம் எனவும் சொன்னேன். ஆராய்ச்சிப் படிப்புகள் (உணவு, தோல், மருத்துவத்துறை, நுண்ணுயிரி, மரபு பொருளியல் மற்றும் பல) பற்றியும் சில செய்திகளை சொன்னேன். 



இந்த சிறிய கலந்துரையாடலுக்காக என்னை அழைத்த முனைவர். இராம கிருஷ்ணன் அவர்களுக்கும், என் நண்பன் பாலாவிற்கும் என் நன்றிகள். நான் இந்த கல்லூரியின், இந்த துறையின் பழைய மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். 

படிப்போம் இன்னும் ஆர்வமாக …

பிரவின் குமார்   
கோயம்புத்தூர்