About

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday 18 November 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 34

வனவிலங்கு வார விழா நிகழ்ச்சி:
விநாயகம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி

வனவிலங்கு வார விழாவின் மூன்றாவது நிகழ்ச்சியை சேலம் -விநாயகம்பட்டி அரசு நடு நிலைப்  பள்ளியில் நடத்தினேன். பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. கிரிஜா அவர்களை சந்தித்துவிட்டு, நிகழ்ச்சிக்கு தேவையானவற்றை தயார் செய்தேன் . சுமார் 63 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நான் என்னை அறிமுகம் செய்துகொண்டு, இன்றைய  நாளில் நாம் என்ன கற்று கொள்ளப் போகிறோம்  என சொன்னேன். வன விலங்கு வார விழா ஏன் கொண்டாட வேண்டும்? எனவும் கூறினேன். சில மாணவர்களிடம் மட்டும் அவர்கள் பெயர், வகுப்பு  மற்றும் கடைசியாக அவர்களின் காட்டு  பயண அனுபவம் குறித்து கேட்டேன். இந்திய குரங்குகளை பற்றி ஒரு சிறிய அறிமுகத்துடன் ஆரம்பித்தேன். நமது மலைகளைப் பற்றியும், இங்கு காணக் கூடிய விலங்குகளைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தேன். இந்த பகுதி கிழக்குக் தொடர்ச்சி மலைக்கு அருகில் இருப்பதால் சேர்வராயன் மற்றும் கொல்லி மலைகள் சிறப்பையும் அங்குள்ள சில பாலூட்டிகளைப் பற்றியும் சொன்னேன். 



பலவகைப்பட்ட விலங்கு அட்டைகளும், வண்ணப்படங்களும், சிறிய விலங்கு கதை புத்தகங்களையும், வகுப்பறையில் பார்வைக்கு வைத்திருந்தேன். அனைவரும் இதனை பார்வையிட்டனர். பின்பு பொதுவாக  வன விலங்குகளின் நன்மைகளையும், நமது காட்டின் நன்மைகளின் எடுத்து சொன்னேன்.



உலகளவில் அழிந்துபோன, அழிவில் உள்ள, நம்மூர்  பகுதியில் அழிவை எதிர்நோக்கியுள்ள  மஞ்சள் தொண்டை குருவி, மலை அணில், தங்க பல்லி, அழுங்கு பற்றிய பல சுவாரசிய தகவல்களை கதை போலச் சொல்லிவிட்டு சோலை காடுகளைக் காப்போம்  என்ற வீடியோவைப்  போட்டுக் காட்டினேன். 



மேலும், வேட்டையும், சுற்றுச்சூழல் சீர்கேடும் எப்படி மனிதனை அச்சுறுத்கிறது என்று சொல்லி விட்டு ஒரு ''Energizer'' என்ற ஒரு விளையாட்டை விளையாட செய்தேன்.

பின்பு அனைவரையும் மூன்று குழுக்களாக பிரித்து வௌவால் தகவல் பெட்டகத்தை  கொடுத்தேன். அதை தொடர்ந்து சுமார்  15 நிமிடங்களுக்கு காட்டு வௌவால்களின் வகைகள், முக்கியத்துவம், அச்சுறுத்தல்கள்,  பற்றியும் விவரமாக எடுத்து சொன்னேன்.

அப்படியே குழுவிற்கு ஒரு குழுத்தலைவரை நிர்ணயிதேன். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மாணவர்கள் தயாரானார்கள். ஒவ்வொரு குழுத் தலைவரும் அனைவர் முன்னாலும் வந்து "வௌவால்கள்" குறித்த தகவல்களை சொல்லிவிட்டு வந்தனர். அனைவருக்கும் கைதட்டல்கள் மூலமாக நன்றிகளை சொல்லிவிட்டு, நீங்கள் உங்கள் பகுதிகளில் உள்ள வன விலங்குகளை பாதுகாக்க என்ன என்ன செய்ய முடியும் என்றும்,  சொல்லிவிட்டு, வன விலங்கு பாதுகாப்பு உறுதிமொழியை சொல்லி, வன விலங்கு வாழ்த்து அட்டைகளை கொடுத்துவிட்டு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டேன்.    




வன விலங்கு குறித்த சேதி, தினம் தினம் நமது காட்டு மக்களிடமும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அப்போதுதான் வன விலங்கு வேட்டை குறையும், நமது காட்டின் அரிய வகை உயிரினங்களை பாதுகாக்கப்படும்.

வன விலங்கு வார விழா அன்று மட்டும் இந்த பரப்புரை போதாது. நமது முழக்கம் எப்போதும் நம் மண்ணையும், மலைகளையும், நம் மக்களையும், நமது உயிரினங்களையும் பாதுகாக்க தொடரும். 

இந்த நிகழ்ச்சியை நடத்த உதவிய பள்ளி தலைமை ஆசிரியை, திருமதி. கிரிஜா மற்றும் இதர ஆசிரியர்களுக்கும் என் நன்றிகள். இந்த நிகழ்ச்சியை நடத்த எனக்கு ஊக்கமும், ஒத்துழைப்பும் வழங்கிய இந்திய அரசின் வன விலங்கு குற்றத் தடுப்பு அமைப்பிற்கும் (Wildlife Crime Control Bureau) என் நன்றிகள். மேலும் ZOO/WILD அமைப்புகளுக்கும் என் சிறப்பு நன்றிகள்.    

அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 

Saturday 8 November 2014

அழுங்குகளைப் பார்த்து ரசிப்பேன்!
அழிவிலிருந்து பாதுகாப்பது என் கடமை ! 

அழுங்குகளைப் பார்த்து ரசிப்பேன்!
அழிவிலிருந்து பாதுகாப்பது என் கடமை ! 

அழுங்குகளைப் பார்த்து ரசிப்பேன்!
அழிவிலிருந்து பாதுகாப்பது என் கடமை ! 

அழுங்குகளைப் பார்த்து ரசிப்பேன்!
அழிவிலிருந்து பாதுகாப்பது என் கடமை ! 

அழுங்குகளைப் பார்த்து ரசிப்பேன்!
அழிவிலிருந்து பாதுகாப்பது என் கடமை ! 

அழுங்குகளைப் பார்த்து ரசிப்பேன்!
அழிவிலிருந்து பாதுகாப்பது என் கடமை ! 


Wednesday 5 November 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 34

வன விலங்கு வார விழா நிகழ்வு 3
விநாயகம்பட்டி அரசுப் பள்ளி, சேலம்

தொடரும் நம் சூழல் பயணங்கள் 33


வன விலங்கு வார விழா நிகழ்வு 2
குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, சேலம்


வன விலங்கு வார விழாவின் இரண்டாவது நிகழ்ச்சியை சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தேன். இந்த நிகழ்ச்சி ஞாயிறு (5.10.2014) மற்றும் திங்கள் (6.10.2014) ஆகிய இரண்டு நாட்களும் நடைபெற்றது. இந்த இரண்டு நாட்களும் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களுகாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காகவும் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தேன்.




முதல் நாள் நிகழ்வை ஆரம்பித்தேன். வெறுமனே வன விலங்கு கருத்துக்களை சொல்லாமல், நமது காடுகள், வளங்கள், தண்ணீர், வன விலங்கு குறித்த பல விளக்க படங்கள், அட்டைகளை காட்சிக்கு வைத்திருந்தேன். பூங்காவிற்கு வருகை தந்த பார்வையாளர்கள் ஆர்வமாக பார்த்தனர். நம்மை சுற்றி உள்ள காட்டு விலங்குகள் குறித்தும் நான் விளக்கமாக கூறினேன். காடுகளையும், விலங்குகளையும் பாதுகாப்பதின் அவசியத்தை சொன்னேன். இன்று ஞாயிறு என்பதால் பூங்காவே, மக்கள் கூட்டத்தில் மூழ்கி இருந்தது.  



பூங்கா ஊழியர்கள் கூட…

பூங்காவில் பணி புரியும் ஊழியர்களும் இந்த கண்காட்சியை வந்து பார்த்து சென்றனர். மாலை ஐந்து மணி வரை இப்படியே குழுக் குழுவாக வரும் பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் மிக எளிய தமிழில் வன விலங்கு பாதுகாப்பு குறித்த கருத்துக்களை எடுத்துச் சொன்னேன். அவர்களை சுற்றி இவ்வளவு உயிரிகள் உள்ளதா என பலரும் ஆச்சர்யத்தில் சென்றதை பார்க்க முடிந்தது. 



இதே போல் இரண்டாவது நாள் கூட பூங்காவில் கூட்டம் அதிகம்தான்.  




நால்வர்

இன்று காலையில் தொடங்கி மாலை நான்கு மணி வரை பொது மக்களுடன் கழித்தேன். இன்றைய தின ஆரம்பத்தில், என்னுடன் நான்கு குழந்தைகள் வந்து ஒட்டிக் கொண்டனர். அவர்கள் பக்கத்துக்கு கிராம பள்ளி செல்லும் சிறார். காட்டு முயல், குரங்கு, ஆமைகள், காட்டு மாடு, அலுங்கு குறித்த தகவலுடன் வௌவால் குறித்த தகவல்களை அவர்களுக்கு சொன்னேன். குழந்தைகளுகாகவே நான் கொண்டுவந்திருந்த வண்ண வண்ண முக முடிகளை கொடுத்தேன். வன விலங்குகள், பூங்காவில் கடைபிடிக்க வேண்டிய சில விசயங்களை குறித்த சில வாசகங்களை சொல்லிக் கொடுத்தேன். அட ..இந்த மாணவர்கள் பரப்புரைக்கு தயார். அவர்கள் முகத்தில் முகமுடி, கையில் பதாகை, மணிக்கட்டில் ஒரு அட்டை. அவர்களை அப்படியே பூங்காவை சுற்றி வர சொன்னேன். சொல்லிக் கொடுத்த வாசகங்களை சொன்னபடியே பூங்காவை வலம்வந்தனர். அனைவரையும் கவர்ந்தனர். குறிப்பாக மான் கூண்டு, குரங்கு கூண்டு, நட்ச்சத்திர ஆமை உள்ள இடம், பறவைகள் உள்ள கூண்டின் அருகில் சென்று "வன விலங்குகளுக்கு உணவளிக்காதீர்கள்" என்று சொல்லிவிட்டு வந்தனர்.                     



நான் இவர்களுடன் செல்ல முடியவில்லை. ஆனால், நிறைய பார்வையாளர்கள் இவர்களிடம் பேசியதாக சொன்னார்கள்.  இந்த மாணவ மணிகள் வந்தது.. எனக்கு உதவியது.. மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.



அவர்களின் பெயர், வகுப்பு, பள்ளி, தொலைபேசி எண்ணை எழுதி வாங்கிக் கொண்டேன். அப்படியே எனது விலாசத்தையும் கொடுத்தேன். மேலும் இந்த நால்வருக்கும் (மனோஜ் குமார், ரசிகப் பிரியா, லீனா தமிழ்வாணன் மற்றும் பரத் ராஜ்) வன விலங்கு வாழ்த்து அட்டைகளை கொடுத்து, வாழ்த்தி, அன்போடு வழியனுப்பி வைத்தேன். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருப்பதை கண்டு கொண்டேன்.        

சுவாரசிய சந்திப்பு 

இவர்களின் சந்திப்பு போலில்லாமல், அமைதியாகத்தான் நடந்தது திரு.சௌந்தர் ராஜன் அவர்களின் சந்திப்பு. சுமார் அரை மணி நேரம் ஆகியும் இவரும், இவர் நண்பரும் இந்த கண்காட்சி இடத்தை விட்டு நகர்ந்தபாடில்லை .. யாருமே என் பக்கம் வரவில்லை என்றாலும், நான் எதாவது செய்து பார்வையாளர்களை என் பக்கம் ஈர்த்து விடுவேன். அப்படி இருக்க ..இப்பொது இருவர் என்னருகே ..விடுவேனா? சிறிய ஊன் உண்ணிகள் குறித்தும், பாருகள் எப்படி குறைந்து போனது என்றும் சொன்னேன். அப்படியே ராட்சத சிலந்தி நமது காடுகளில் உள்ளது என்றும் சொன்னேன். அவர்கள் சில தகவல்களை சொல்லிவிட்டு சென்றனர்.  



குதூகல ஜனங்கள் 

இன்று ரமலான் என்பதால் முகமதியர்கள் கூட்டத்தை பூங்காவில் எங்கும் காண முடிந்தது. நான் ரொம்ப "பிஸி" என்று படு வேகமாக, போன் பேசிய படியே பீறிட்டு நடை போட்ட அசட்டு முகங்களையும் காண முடிந்தது.    

சின்ன சின்ன குட்டீஸ் இங்கு வந்து "கடலாமையின் கதை" புத்தகத்தை பார்த்து, படித்து விட்டு சென்றதை பார்த்தேன். 



சில பள்ளி ஆசிரியர்கள், அவர்களின் குழந்தைகளுடன் இங்கு வந்து "பாரு பாப்பா" நீ உன்னோட புக்ஸ்ல படிச்சிருக்கல..Amphibians ..நியாபகம் வருதா? தண்ணீர்லயும் வாழும், நிலத்திலயும் வாழும்..என்ன புரியுதா? என கேட்டு ஆர்வத்தை தூண்டியதையும் கண்டேன். 

இது போட்டோ கடை இல்லை

சும்மா கை கட்டி நின்ற என்னை ஒருவர் ..சார். நீங்க போட்டோகிராபரா? கொஞ்சம் எங்க ரெண்டு பேரையும் வச்சு ஒரு போட்டோ எடுத்து கொடுங்கள் என கேட்டதும், எனக்கு முதலில் கொஞ்சம் கோபமாக இருந்தாலும், பின்பு மெதுவாக விளக்கினேன். அண்ணா. இது வன விலங்கு விழிப்புணர்வு நடக்கும் இடம். இது போட்டோ கடை இல்லை, என சொன்னேன். 

சற்று நேரத்திலே மற்றுமொருவர் "தம்பி இங்க இருக்குறதெல்லாம் எதுக்கு ? நீங்க பைக்குக்கு ஸ்டிக்கர் ஓட்டுவீங்களா ? என அவர் கேட்க ..  இல்லை என சொல்லி நான் நொந்து போய் ஐயோ.. சாமி ..ஆள விடு.. என வெளியில் சென்று அன்னாசி பழம் சாபிட்டிட்டு விட்டு வந்தேன்.     
  
இந்த பூங்கா ஆரம்பித்து பல வருடங்கள் ஆனாலும் இதுதான் வன விலங்கு குறித்த மூன்றாவது  நிகழ்ச்சியாக இருக்கும் என் நான் நினைக்கிறன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் பொதுவாகவே, வெகு ஜன மக்களுக்கு காட்டுயிர் குறித்த கரிசனம் அதிகம் உள்ளதையும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், வனத் துறையும் இணைந்து செயல்பட்டு வனத்தை பாதுகாக்க பல வித செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 

நான் திட்டமிட்டபடி இந்த நிகழ்ச்சி ஓரளவிற்கு முடித்து விட்டேன். பார்ப்போம்..வரும் மாதங்களில் இன்னும் நிறைய நிகழ்ச்சிகளை இங்கு நடத்த முடியுமா என்று..

நான் சற்றும் எதிர் பார்க்காமல் இருந்த சமயத்தில், என்னை காண வந்த அன்பான "காட்டு மாடு" என்னை வசீகரித்தது.     



நன்றி
இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கிய திரு.வி. கணேசன் இ.வ.ப, முதன்மை வனப் பாதுகாவலர் மற்றும் திரு.தனபாலன், மாவட்ட வன அலுவலர், சேலம். மற்றும் குரும்பப்பட்டி பூங்கா வன சரகர், மற்றும் ஊழியர்களுக்கும் என் நன்றிகள். நிகழ்ச்சிக்காக பல வித தகவல்களையும், அட்டைகளையும் வழங்கிய, உதவி நல்கிய என் ஜூ அவுட்ரீச் அலுவலகத்திற்கும் என் நன்றிகள். 

அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 
அலைபேசி: 9600212487
               


Tuesday 28 October 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 32


 வன விலங்கு வார விழா நிகழ்வு 1 - சுஸ்லான் காற்றாலை, தேவர்குளம், திருநெல்வேலி  



ஓவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வாரம் அதாவது 2 முதல் 8 வரை இந்திய வன விலங்கு வார விழாவாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இந்த மாதத்தில் 04 ம் தேதி அன்று, வன விலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊத்துமலை பகுதியில் உள்ள Suzlon காற்றலை நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினேன்.

காலை 11 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது, இதில் இந்திய வன விலங்கு வார விழா ஏன் கொண்டாட வேண்டும், என சொல்லி இந்திய பாலூட்டிகள், தெற்காசிய தவளை வகைகள், தெற்காசிய குரங்கு வகைகள், அழிவில் அலுங்கு எனப் பலவகைப்பட்ட அட்டைகளையும், பதாகைகளையும் காட்சிக்கு வைத்திருந்தேன். மேலும் பல்வேறு பாலூட்டிகளின் படங்களையும் பார்வைக்கு வைத்திருந்தேன்.          


ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த நிகழ்வு "மயில்" பற்றியதாக இருந்தாலும் நான் அதிகமாக பாலூட்டிகளைப் பற்றி செய்திகளை சொன்னேன். காடுகள் அழிவு குறித்த ஒரு சிறிய வீடியோவை காட்டினேன். மேலும் இந்த ஊத்துமலைப் பகுதியில் வாழும் உடும்பு, வௌவால். கீரி, முள் எலிகள் பற்றிய பல சுவாரசிய உண்மைகளை சொன்னேன். அலுங்கு எனப்படும் எறும்பு திண்ணியின் 10 உண்மைகளை சொன்னேன். படங்கள் மூலமாக இந்த செய்தி அவர்களை எளிதில் சென்றடைந்தது.    



உலக அழிவில் அழிந்து போன "டோ டோ" பறவைப் பற்றியும், இந்திய அளவில் அழிந்து போன சீட்டா எனப்படும் சிவிங்கிப் புலி பற்றி சொன்னேன். மேலும் நமது மலைகளில் அழிவின் விளிம்பில், ஆபத்தில் உள்ள சாம்பல் நிற மலை அணில், சோலை மந்தி, வரையாடு பற்றி கூறினேன். அப்படியே 'சோலைக் காடுகளை காபோம்" என்ற என்ற வீடியோவையும், வெளிச்சம் வெளியீட்டின் "மயிலு" என்ற  வீடியோவையும் காட்டினேன்.         
       
இந்த நிகழ்ச்சியின் பங்கேற்ப்பாளர்கள் அனைவரும் பொறியாளர்கள் என்பதால் பலரும் பல மாதிரியான கேள்விகளைக் கேட்டனர். அவர்கள் பகுதியில் உள்ள மயில்கள் எண்ணிக்கையில் அதிகம் உள்ளதாகவும் அவற்றை பாதுகாக்க நடவடிக்கை தேவை எனவும் வலியுறித்தினர்.  

மயில்கள் இந்த வளாகத்திற்குள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டனர். மயிலை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த கேள்வி இருந்ததால், அங்குள்ள ஒருவரே பதில் சொன்னார். அப்படியே சூழல் குறித்த சில வாக்கியங்களைச் சொல்லிவிட்டு  நிகழ்ச்சியை முடித்துக் கொண்டேன்.  


நன்றி:
இந்த நிகழ்விற்காக என்னை அழைத்த நண்பர்.வெங்கடேஷ் பாபு, நிகழ்ச்சியை நடத்த ஒத்துழைப்பு நல்கிய நண்பர் ஜெகன் மற்றும் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் என் நன்றிகள்.


அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர்  
அலைப்பேசி
9600212487


Sunday 21 September 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 31


பேரூர் பள்ளி குழந்தைகளுடன் பல்லுயிரியம் நிகழ்ச்சி


கடந்த மாதத்தில் ஒரு நாள் கோயம்புத்தூரில் உள்ள பேரூர் அரசு பள்ளியில், பல்லுயிரியம் குறித்த இரண்டு மணி நேர விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சியை "சிக்ஸ்த் சென்ஸ் பவுண்டேசன்" ஏற்பாடு செய்திருந்தது. 



முதலில் என்னை அறிமுகம் செய்து கொண்டு, மலைப் பகுதிக்கு அருகில் வசிக்கும் குழந்தைகளை எழுந்திரிக்க சொன்னேன். மூன்று மாணவர்கள் அவர்கள் அருகில் உள்ள மலையை பற்றியும் அங்குள்ள, அவர்கள் பார்த்த விலங்குகள் பற்றியும் சொன்னார்கள். காட்டு விலங்குகள் பற்றி சொன்னேன். அவர்களை சுற்றி, வீடுகளில் தென்படும் உயிரினங்கள் பற்றி சொல்லிவிட்டு, நம்மை விட்டு பிரிந்து சென்ற அல்லது நாம் அழித்த "டோ டோ" பறவை பற்றியும், சிவிங்கி புலி பற்றியும் சொன்னேன். ஒரு சிறிய வீடியோவை காட்டிவிட்டு, உணவு சங்கிலி பற்றியும், காட்டு அணில்கள் பற்றியும், பிணம்திண்ணி கழுகுகள் பற்றியும் சொன்னேன்.   



நன்னீர் பற்றியும், மாசுபாடுகள் பற்றியும் சொன்னேன். அப்படியே மாணவர்களுடன் மரங்கள் குறித்து சொல்லிவிட்டு "உசந்த மரத்தாலே ஐலசா" என்ற பாடலை சொல்லிக் காட்டிவிட்டு, அனைவரையும் ஒன்றாக வைத்து "உறுதி மொழியை" ஆரம்பித்து, முடித்து வைத்தேன். மாணவர்கள் பலரும் ஆர்வமாக என்னுடன் சேர்ந்து பலத்த சப்தத்தில் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். வகுப்பிற்கு வெளியில் நான் காட்ச்சிக்கு வைத்திருந்த வன விலங்கு பாதுகாப்பு அட்டைகளையும், படங்களையும் மாணவர்கள் பார்த்து பயன் பெற்றனர். 



இந்த நிகழ்ச்சிக்காக என்னை அழைத்த தோழர்.கிருஷ்ணா அவர்களுக்கும், அவர் குழுவினருக்கும் என் நன்றிகள். தோழர்.கிருஷ்ணா சிக்ஸ்த் சென்ஸ் பவுண்டேசன் என்ற அமைப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு மூலமாக பல மாணவர்களின் மேல் படிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அரசுப் பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தியது என்னக்குள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மேலும் மாணவர்களின் அசாத்திய புரிந்து கொள்ளும் திறனையும், ஆர்வத்தையும் கண்டுகொண்டேன்.                    



மண்மணம் வீசும் பேரூர் வீதியில், இந்த சூழல் மாணவர் படை,  நம் சுற்றுச் சூழலை காக்கும் பணியில் ஈடுபடுவர்.  


அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 

Tuesday 19 August 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 30



புலியும் வேண்டும்! எலியும் வேண்டும்!

நான் எழுதிய சிறிய கட்டுரையை இங்கே காணலாம். சுற்றுச் சூழல் புதிய கல்வி மாத இதழில் பிரசுரமாகி உள்ளது. வன விலங்கு என்றாலே பெரிய யானையும், புலியும்தான் ஞாபகம் வரும். ஆனால் சிறிய பாலுட்டிகளைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள இந்த கட்டுரையைப் படிக்கலாமே. உங்கள் கருத்துக்களை சொல்லலாமே!

நன்றி!  

வாருங்கள். மாற்றத்திற்கான நேரம் இது.  



பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 

Sunday 17 August 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 29

நன்னீர் பல்லுயிரியம் - பயிற்சி பட்டறை, சிவகாசி    

இந்த மாதம் 1ம் தேதி, சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி விலங்கியல் துறையும், கோயம்புத்தூர் ஜூ அவுட்ரீச் அமைப்பும் இணைந்து ஒரு நாள் "பிராந்திய நன்னீர் பல்லுயிரிய பாதுகாப்பு பயிற்சிப் பட்டறையை"  கல்லூரி ஆய்வரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை இளங்கலை விலங்கியல் துறை தலைவர், முனைவர். இசையரசு அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சயில் நான் கலந்து கொண்டு மதிய நிகழ்வுகளை நடத்தினேன். கல்லூரியின் தாளாளர் திரு. அய்யன் கோடீஸ்வரன், கல்லூரியின் முதலவர், முனைவர். பாண்டியராஜன், சிறப்பு அழைப்பாளர் முனைவர். ஹனீபா (செயின்ட் சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை), முனைவர் ராஜன் மற்றும் முனைவர். இசையரசு பயிற்சிப் பட்டறையின் விளக்க நூலை வெளியிட்டு பேசினார்கள். 



முனைவர். ஹனீபா "நன்னீர் மீன்களும் நன்னீர் நிலைகளும்" என்ற தலைப்பில் பேசும்போது, கடந்த சில வருடங்களாக அரிய நன்னீர் மீன்கள் எப்படி அழிந்தது, நன்னீர் மீன்களில் உலகளாவிய பரவல், உள்ளூர் பரவல், வகைகள், அதிகம் உணவிற்காக பெறப்படும் மீன்கள் போன்ற தகவல்களை அவருக்கே உரித்தான எளிமையான பாணியிலே விளக்கி கூறினார். 



தொடர்ந்து, சிவகங்கை  ராஜா துரைசிங்கம் விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர்.சுரேஷ் குமார் அவர்கள் "நன்னீர் வாழிடங்களைப் பாதுகாத்தல்" என்ற தலைப்பில் பேசினார்கள். நன்னீர் சூழல் மிகப் பெரிய அளவில் மனிதனுக்கும் மற்ற ஜீவிகளுக்கும் உதவி செய்கின்றது, இன்றைய வளர்ச்சி நன்னீர் வாழிடங்களையும், அதை சார்ந்துள்ள விலங்குகளையும், தாவரங்களையும் அழிக்கின்றன என்றார். 

பின்பு மாசுபாடுகள், நன்னீர் மேலாண்மை குறித்தும் பேசினார்கள்.      

மதிய உணவிற்குப் பிறகு நான் நன்னீர் பல்லுயிரியத்தின் அவசியத்தை விளக்கினேன். பின்பு மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றி சொல்லிவிட்டு, அனைவரையும் எட்டு குழுக்களாகப் பிரித்து மேற்குத் தொடர்ச்சி மலை பற்றிய ஒரு வரைபட செயல்பாட்டை செய்தேன். தொடர்ந்து ஆறுகள் பற்றிய ஒரு செயல்பாட்டை செய்தேன். பின்பு ஆறுகள் பற்றி சொல்லிவிட்டு, நன்னீர் சூழல் வகைகள் அடங்கிய ஒரு செயல்பாட்டை செய்தேன்.         



பின்பு அவர்கள் பகுதியில் காணும் நன்னீர் தட்டான்கள் மீன்கள் குறித்த வண்ண அட்டையை காட்டி விளக்கினேன். நன்னீர் தகவல் பெட்டகத்தை பார்த்து, அதில் உள்ள தகவல்களை சிறிது தெரிந்து கொண்டார்கள்.  மேற்குத் தொடர்ச்சி நன்னீர் பல்லுயிரியம் என்ற வாசகம் அடங்கிய ராக்கியை அருகில் உள்ளவர்களின் கையில் கட்டினார்கள். மாசுபாடுகள் மூலமாக அரிய நன்னீர் மீன்கள், நத்தைகள் எப்படி அழிவில் உள்ளன என்றும் சொன்னேன். நீங்கள் என்ன செய்யலாம் என்று சில துணுக்குகளை சொன்னேன். 




நன்னீர் வாழிடங்களையும், உயிரினங்களையும் பாதுகாக்க தொடர் உறுதி மொழியை நான் சொல்ல மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் சொன்னார்கள். 


இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர் பகுதியிலிருந்து நூறுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர். ஆய்வரங்க வரவேற்பறையில் நன்னீர் பாதுகாப்பு தொடர்பான சில புத்தகங்களையும், வண்ண அட்டைகளையும் காட்சிக்கு வைத்திருந்தேன். பங்கேற்ப்பாளர்கள் பார்த்து பயன் பெற்றனர். 



இந்த பயிற்சிப் பட்டறைக்காக என்னை அழைத்த முனைவர். இசையரசு அவர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் என் நன்றிகள். நன்னீர் தகவல் பெட்டகத்தையும், பயிற்சி கையேட்டையும், வண்ண அட்டைகளையும் வழங்கிய ஜூ அவுட்ரீச் அலுவலகத்திற்கும், ஆசிரியர். தானியல் மற்றும் மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள். இந்த நிகழ்ச்சியை நடத்த உதவிய நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் என் நன்றி. 

அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர்           

தொடரும் நம் சூழல் பயணங்கள் 28



நன்னீர் பல்லுயிரியம் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - கொடைக்கானல்

கடந்த சூன் 26ல் இரண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நான் கொடைக்கானலுக்கு சென்றிருந்தேன். இரண்டு நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை "மேற்குத் தொடர்ச்சி மலை நன்னீர்  மேலாண்மையும், பாதுகாப்பும்" என்ற தலைப்பில் வடிவமைத்திருந்தேன். இந்த நிகழ்ச்சியை  ஜூ அவுட்ரீச் அமைப்பும், பழனி மலை பாதுகாப்பு இயக்கமும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி சிறப்பான சூழல் பள்ளிகளை ஏற்ப்படுத்துவதற்க்கான ஒரு நிகழ்வு ஆகும்





முதலாவது நிகழ்ச்சி கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளித் தலைமையாசிரியர் அவர்களை சந்தித்துவிட்டு நாங்கள் மாணவர்களை சந்தித்தோம். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சுமார் 60 பேர் கலந்து கொண்டனர். முதலில் பழனி மலை பாதுகாப்பு இயக்கத்தின் திரு.அந்தோணி அவர்கள் அறிமுக உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அவர் பேசும்போது 'பள்ளிக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்த ஆறு எப்படி சாக்கடையானது' என சொன்னார்கள்.  பின்பு பழனி மலை பாதுகாப்பு இயக்கத்தின் திரு. பாலா அவர்கள் தண்ணீர் மாசுபாடுகள் பற்றியும் பழனி மலை பாதுகாப்பு இயக்கத்தின் வேலைகள் மற்றும் தொடர் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்கள். 





அப்புறமாக நான் அனைவருக்கும் சந்தோசமாக ஒரு வணக்கத்தை சொல்லிவிட்டு, எல்லா குழந்தைகளின் பெயர், ஊர் மற்றும் கடைசியாக அவர்கள் சென்ற நன்னீர் ஸ்தலம்/இடம் பற்றி விரிவாக கேட்டு தெரிந்து கொண்டேன். பின்பு எல்லாரிடமும் அவர்கள் நன்னீரில் பார்த்த உயிரினங்களைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டேன். பலரும் ஆர்வமாக பதில் தந்தனர். அவர்களின் சப்தத்தில் பக்கத்துக்கு அறை மாணவர்களும் எட்டி எட்டி பார்த்துவிட்டு சென்றனர். அப்படியே, நன்னீர் என்றால் என்ன? பூமியில் உள்ள நன்னீரின் அளவு போன்றவற்றை சொன்னேன். 




பின்பு நன்னீர் எனப்படும் நல்ல தண்ணீரின் பயன்கள் என்ன என்ன என்று அவர்களிடம் கேட்டேன். பின்பு தண்ணீர், தாவரங்கள் மற்றும் விலங்குகள் சூழ்ந்த வாழ்க்கை முறையைப் பற்றி சில உதாரனங்களுடன் சொன்னேன். முட்டை, வாழைப்பழம், பால், தர்பூசணி மற்றும் மனித உடலில் உள்ள தண்ணீரின் சதவிகித்தை சொன்னேன். அவர்கள் அடிக்கடி தண்ணீரில் பார்க்கும் உயிரினங்களின் பெயர்களை உரத்த குரலில் சொல்லச் சொன்னேன். பலரும் தட்டான், மண்புழு, பட்டாம்பூச்சி, மீன்கள், முதலை, நாரை, கொக்கு, பாம்பு, தவளை என சொல்லிக் கொண்டே போனார்கள். அவர்கள்சொல்ல மறந்ததை நான் சொல்லி நிறைவு செய்தேன். பின்பு இயற்கை நம் அன்னை என்ற வீடியோவைக் காட்டினேன். 




அப்படியே அவர்களை அடுத்த நிகழ்வான 'மனநிலையை புரிந்து கொள்ளுதல்' என்ற ஒன்றை வகுப்பிற்க்கு வெளியில் நடத்தினேன். இதில் பலரும் ஆர்வமாக கலந்து கொண்டு இந்த மலைகள், காடுகள் மேலுள்ள அன்பை நேரிடையாக விளக்கினர். பின்பு அனைவரையும் வகுப்பிற்குள் அழைத்து, நன்னீர் புதிர் என்ற செயல்பாட்டை நடத்தினேன். அப்படியே தண்ணீர் சுழற்சி பற்றிய செய்திகளை கதை போலச் சொன்னேன். 

பின்பு நல்ல தண்ணீர் ஆதாரங்கள் எவை எவை ? அவற்றில் நமது ஊரில் எவை உள்ளன ? எனக் கேட்டேன். பின்பு "எங்களால் இந்த பூமியில் வாழவே முடியவில்லை" என உரத்த குரலில் பேசும் மாணவர்களின் வீடியோ ஒன்றைக் காட்டினேன். அப்படியே மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளைப் பற்றி சொல்லிவிட்டு, நன்னீர் தாவரங்களும், அவைகளின் பயன்களும் பற்றி சொன்னேன். பின்பு சோலைக் காடுகளைக் காப்போம் என்ற வீடியோவை காட்டிவிட்டு அமர்ந்தேன். மாணவர்கள் பலரும் ஆர்வமாக இந்த அனைத்து செயல்பாடுகளிலும் கலந்துகொண்டனர். 




அப்புறமாக, தோழர். அந்தோணி அவர்கள் கொடைக்கானலில் எங்கெல்லாம் சோலைக் காடுகள் உள்ளன என்றும், இன்று வளர்ச்சியும், சுற்றுலாவும், அந்நிய வந்தேரி மரங்களின் ஆதிக்கத்தால் எப்படி சோலைக் காடுகள் அழிவில், ஆபத்தில் உள்ளன என்று விளக்கினார்கள். 




பின்பு நான் தண்ணீர் மாசடைதல் பற்றியும், தண்ணீர் பாதுகாக்க சில வழிமுறைகள் பற்றியும் சொன்னேன். பின்பு ஜூ அவுட்ரீச் அமைப்பு வழங்கிய நன்னீர் தகவல் பெட்டகத்தை அனைவருக்கும் வழங்கி அதில் உள்ள சில நன்னீர் மீன்கள், தட்டான்கள் மற்றும் நன்னீர் நத்தைகள் பற்றி விளக்கி கூறினேன். அப்படியே நன்னீர் பல்லுயிரியம் - பாதுகாப்பது நம் கடமை என்ற வாசகம் அடங்கிய அட்டையை அனைவரும் பார்த்து, படித்து உற்சாகமடைந்தனர். நன்னீர் பாதுகாப்பு உறுதிமொழியை நான் சொல்ல, அனைவரும் பின்னால் சொல்லி உறுதியுடன் அமர்ந்தனர். கடைசியாக நண்பர். கார்த்திக் ராஜா, அவர்கள் நன்றியுரையுடன் இந்த நன்னீர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி முடிந்தது. 


மிக எளிமையான அறிவியலுடன், அதிகமான செயல்பாடுகளுடன் இருந்த இந்த நிகழ்ச்சி நிச்சயம் மாணவர்களுக்கு ஒரு அடிப்படை நன்னீர் உயிரிகள் பற்றியும், சோலைக் காடுகள் பற்றியும், தண்ணீர் பாதுகாப்பு பற்றியும் ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும் என நான் நம்புகிறேன்.  


மதிய உணவிற்குப் பிறகு நாங்கள் "என் சத்ய சுரபி" பள்ளிக்கூடத்திற்கு சென்றோம். பள்ளித் தாளாளர் பத்மினி மணி அவர்களைச் சந்தித்து விட்டு, அவர்களின் அறிமுக உரையுடன் இந்த "நன்னீர் - பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். நான் என்னை அறிமுகம் செய்துகொண்டு, அனைத்து குழந்தைகளின் பெயர், வகுப்பு, ஊர், கடைசியாக பார்த்த/சென்ற நன்னீர் இடம் பற்றி சொல்ல சொன்னேன். இதில் பல குழந்தைகள் அருவியில் குளித்த அனுபவங்களையும், ஏரிக் கரையில் அமர்ந்து மீன்களையும், பறவைகளையும் பார்த்து ரசித்ததையும் பகிர்ந்து கொண்டனர். 




மேலும் அவர்கள் சமீபத்தில் சென்ற இன்பச் சுற்றுலாவில் அவர்கள் கண்டு கழித்த பசுமையான இடங்களையும் சொல்லி மகிழ்ந்தனர். பின்பு, மேற்குத் தொடர்ச்சி மலை பற்றியும்,அங்குள்ள சில நன்னீர் உயிரிகள் பற்றியும் சொன்னேன். நன்னீர் என்றால் என்ன ?நமக்கு நன்னீர வழங்கும் ஆதாரங்கள் எவை எவை எனச் சொன்னேன். தண்ணீர் நமக்கு அடிப்படை ஆதாரம் என சொல்லி, ஒரு திறனாய்வு மதிப்பீடு என்ற ஒரு செயல் பாட்டை வகுப்பிற்கு வெளியில் நடத்தினேன். இதில் குழந்தைகள் சிறப்பாக கலந்து கொண்டனர். 




பின்பு அனைவரையும் 7 குழுக்களாகப் பிரித்து, குழுவிற்கு ஒரு குழுத் தலைவரை தேர்ந்தெடுத்தேன். ஓவ்வொரு குழுவிற்கும் நன்னீர் விலங்குகள் உள்ள சிறிய அட்டைகளைக் கொடுத்து அவற்றை இணைக்க செய்யும் ஒரு "புதிர் விளையாட்டை" விளையாடச் சொன்னேன். அனைவரும் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு அனைத்து குழுக்களும் படங்களை இணைத்திருந்தர்கள். அப்புறமாக, குழுத்தலைவர் முன்னால் வந்து அந்த விலங்கின் நன்மைகளை சொல்லிவிட்டு கைத்தட்டல்களுடன் அமர்ந்தனர். அவர்களுக்கு மேலும் புரியும் வண்ணம் வகைப்பாடு என்ற ஒரு நிகழ்வை நடத்தினேன். 




பின்பு சோலைக் காடுகள் குறித்தும், நன்னீர் மீன்கள், தட்டான்கள், நத்தைகள் மற்றும் தாவரங்கள் குறித்தும், அவற்றின் சூழல் நன்மைகள் குறித்தும் சொன்னேன். சேகர் தத்தாத்ரி அவர்களின் சோலைக் காடுகளை காப்போம் என்ற வீடியோவை காட்டினேன். மாசுபாடுகள் பற்றி சொல்லிவிட்டு அமர்ந்தேன். 




தொடர்ந்து, திரு.அந்தோணி அவர்கள் தண்ணீர் தரம் அறியும் எளிய முறைகள் பற்றியும், நன்னீர் பாதுகாக்கும் உக்திகள் பற்றியும் சொன்னார்கள். அப்படியே நன்னீர் தகவல் பெட்டகத்தில் உள்ள வண்ண வண்ண மீன்களையும்,தட்டான்களையும் பார்த்து, அறையில் இருந்த நன்னீர் மீன்கள், தட்டான்கள், நன்னீர் முகமுடிகள் உள்ள அட்டைகளையும், வண்ண படங்களையும் பார்த்து விட்டு அமர்ந்தனர். 




அனைவரும் சேர்ந்து நன்னீர் பாதுகாப்பு தொடர் உறுதி மொழியை எடுத்துக் கொண்டோம். கடைசியாக தோழர். கார்த்திக் ராஜா அவர்கள் நன்றியுரையில் பேசும் போது, நாம் அனைவரும் எடுத்த இந்த உறுதி மொழியை நாம் கடைபிடிக்க முயற்சி செய்ய வேண்டும் எனக் கூறினார்.       




மெல்லிய பியானோ இசையின் பாடலுடன், மாணவ - மாணவிகளின் நன்றிகளுடன் இந்த மாலைப் பொழுதில் நிகழ்ச்சி முடிந்தது. இந்த பள்ளியின் தாளாளர். பத்மினி மணி அவர்கள் எனக்கு 'சர் டேவிட் அட்டன்ப்ரோ அவர்களின் The state of the Planet' என்ற குறுந்தகட்டை வழங்கினார்கள். அனைவருக்கும் நன்றியை சொல்லிவிட்டு குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தேன்.      

இந்த நிகழ்சிக்காக அழைத்த தோழர்.கார்த்திக் ராஜா, பழனி மலை பாதுகாப்பு இயக்கம், அவர்களுக்கு என் நன்றிகள். என் ஜூ அவுட்ரீச் அலுவலகத்திற்கும் என் நன்றிகள். எளிய முறையில் வன விலங்கு பாதுகாப்பு கருத்துக்களை வழங்க உதவிய முனைவர். தானியல் மற்றும் திரு. மாரிமுத்து அவர்களுக்கும் என் நன்றிகள். கொடைக்கானல் அரசுப் பள்ளி மற்றும் என் சத்ய சுரபி பள்ளி தலைமை  ஆசிரியர்களுக்கும், சக ஆசிரியைகளுக்கும்  என் நன்றிகள். 

பகிர்தல்கள்:

இந்த வகுப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த நன்னீர் வகைப்பாடு, புதிர் மற்றும் மாசுபாடுகள் பற்றி சொன்னவைகள் எனக்கு எளிமையாக புரிந்தது. நமது காட்டையும், அங்குள்ள பல தாவர, விலங்குகளையும் பாதுகாக்க நிச்சயம் நான் உதவுவேன் என்று ஒரு மாணவன் சொன்னான். 




இந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் தீவிரமாக எதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும், ஆர்வத்திலும் உள்ளதை பார்க்க முடிந்தது. இந்த சிறப்பான மாணவர்கள், மிக சிறப்பான செயல்களைச் செய்வார்கள். நம்முடைய இந்த ஒரு சிறிய நிகழ்ச்சி, நிச்சயம் இந்த மாணவர்களிடத்தில் காட்டுயிர் கரிசனத்தையும், நன்னீர் அவசியத்தையும் புரிய வைத்திருக்கின்றது.  

ஒரு விதை -- வெளிச் சூழல் எப்படி இருந்தாலும் இங்கே மரமாகும்.  

அன்புடன்
பிரவின் குமார் 
கோயம்புத்தூர்