தொடரும் நம் சூழல் பயணங்கள் III
கடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 11) நானும் என் தோழியும் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள பில்லூர் என்ற மலை கிராமத்திற்கு, குழந்தைகளுகான சுற்றுச்சூழல் நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்தோம். பில்லுரில் உள்ள கி ஸ்டோன்- அலுவலகத்தில் நிகழ்ச்சி நடந்தது. மேட்டுப்பாளையத்திலேருந்து நாங்கள் கி-ஸ்டோன் வாகனத்தில், காட்டின் வழியே, கரடு முரடான பாதை வழியாக பில்லூர் போய் சேர்ந்தோம். இந்த சாலையில் போகும் போது "எப்படித்தான் இந்த பகுதி மக்கள் இந்த ரோட்டில் போகிறார்கள்" என்ற உணர்வு வந்தது.
இந்த ஊர் மிக அழகாகவும், அதிகம் ஆள் நடமாட்டமில்லாததாக இருந்தது. "வன விலங்குகளும் காடுகளும்" என்ற பொதுவான தலைப்பில் நிகழ்ச்சியை வடிவமைத்திருதோம். நாங்கள் வனவிலங்குகளின் அட்டைகளை சுவற்றில் ஒட்டி கொண்டிருந்தோம். குழந்தைகள் ஒருவர் ஒருவராக வந்துகொண்டு இருந்தனர். மிக எளிமையான சுற்றுச்சூழல் அறிமுகத்துடன் குழந்தைகளுடன் கலந்துரையாடினோம்.
எப்போதும் நாம் குழந்தைகளை அறிமுகபடுத்தும் அதே Know each other விளையாட்டு மூலமாக அவர்களை பற்றி தெரிந்து கொண்டோம். பின்னர் "வன விலங்குகள்" என்ற தமிழ் வீடியோ காண்பித்துவிட்டு, அவர்களை சுற்றி உள்ள விலங்குகளை பற்றி சில செய்திகள் சொன்னோம்.
பின்னர் ஐந்து வகை உயிர் குழுக்களை பற்றி அட்டை மூலமாக விளக்கினோம். பின்னேர் அவர்களையும் திரும்ப சொல்ல சொன்னோம். அப்புறமாக "ஐலசா" என்று முடியும் ஒரு நாட்டுப்புற குழு பாடலைப் பாடிவிட்டு அதன் கருத்துகளை கூறினேன். பறப்பன, ஊர்வன, இருவாழ்விகள், மீன்கள், பாலுட்டிகள் பற்றி உதாரணங்களை சொல்லிவிட்டு, தவளையின் வாழ்க்கை சுழற்சியை படம் மூலமாக விளக்கிச் சொன்னேன்.
பின்னர் energizer என்ற ஒரு சிறிய விளையாட்டை முடித்துவிட்டு, அடுத்த அடுத்த நிகழ்வான "குழு வரைபடம்" பகுதிக்கு சென்றோம்.
மதிய உணவுக்கு பின்னர் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஐந்து குழுவாக பிரிந்து "சூழல் மாசுபாட்டில் நம் விலங்குகள்" என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு படம் வரைந்து, அதன் விளக்கங்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் சொன்னார்கள்.
அப்புறமாக வௌவால், தவளை, பூச்சி மற்றும் தேனீ, பொம்மைகள் கொண்டு அவற்றின் சூழல் முக்கியத்துவம் பற்றி சொன்னோம்.
0 comments:
Post a Comment